திருவள்ளூர், செப்.30: திருவள்ளூர் மாவட்டம் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 10.01.2016 அன்று 16 வயது சிறுமியின் தாயார் தனது மகளை காணவில்லை என புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் சிறுமி காணவில்லை என வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர். பின்னர் வழக்கு விசாரணையில் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தது சம்மந்தமாக சிறுமியின் வீட்டிற்கு அருகே வசிக்கும் ஏழுமலை மகன் ஜெய்கணேஷ்(36) என்பவர் மீது டேங்க் பேக்ட்ரி காவல் நிலையத்தில் போக்சோ சட்டப்பிரிவில் மாற்றம் செய்யப்பட்டது. இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் அமுதா ஆஜராகி வாதாடினார். வழக்கின் விசாரணையில் திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் ஜெய் கணேஷ் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.