தொண்டி,செப்.30: நம்புதாளை அரசு உயர் நிலைப்பள்ளி வளாகத்தில் பயன்பாடற்ற அங்கன்வாடி கட்டிடத்தை ஆபத்து ஏற்படுத்தும் முன்பு இடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொண்டி அருகே நம்புதாளை அரசு உயர்நிலை பள்ளி வளாகத்தில் இடிந்த நிலையில் அங்கன்வாடி கட்டிடம் உள்ளது. கடந்த சில வருடங்களாக அங்கன்வாடி செயல்படாததால் எவ்வித பயன்படும் இல்லாமல் இடிந்த நிலையில் ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. இங்கு படிக்கும் மாணவ,மாணவியர் இந்த இடிந்த கட்டிடத்தின் அருகில் தான் விளையாடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.