தஞ்சாவூர், செப். 29: தஞ்சாவூர் பெரிய கோயில் வெளிப்புற மதில் சுவர் சீரமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் பெரிய கோயில் சிறப்பு மிக்க சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். அங்கு தினமும் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தமிழ்நாடு மட்டுமில்லாமல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். மேலும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமானவர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்து தஞ்சாவூர் பெரிய கோயிலில் சிறப்பு மிக்க ஓவியங்கள், வரைபடங்கள் மற்றும் கோயில் வெளிப்புறங்களில் புகைப்படங்கள் எடுத்து செல்வது வழக்கம்.