முத்துப்பேட்டை, செப்.29: முத்துப்பேட்டையில் பிஎப்ஐ அமைப்பினர் திடீர் போராட்டம் அறிவித்ததால் நூற்றுக்கணக்கான போலீஸ் குவிக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதன் எதிரொலியாக நகரில் உள்ள அமைப்பின் நகர அலுவலகத்தில் விளம்பர போர்டு மற்றும் கொடிகளை அப்புறபடுத்தி பேரூராட்சி அருகே போராட்டம் நடைபெறும் என அந்த அமைப்பினர் அறிவித்திருந்தனர். இதனையடுத்து பேரூராட்சி அருகே திருவாரூர் ஏடிஎஸ்பி வெள்ளத்துரை, டிஎஸ்பி விவேகானந்தன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.