திருச்சி, செப்.29: திருச்சி கே.கே.நகர் பகுதியில் உள்ள டீக்கடை ஓட்டலுக்கு திருச்சி மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையிலான குழுவினர் சீல் வைத்தனர். திருச்சி கே.கே.நகர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் கடையில் கடந்த 12.01.2022 அன்று தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பான்மசாலா குட்கா போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், அவர் தொடர்ந்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டு மீண்டும் அந்த கடையில் 5.8.2022 அன்று ஆய்வில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டு மீண்டும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.