விருதுநகர்,செப்.29: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் மழைநீர் சேகரிப்பு திட்டம் தொடர்பான ஆய்வு கூட்டம் நடந்தது. மத்திய அரசின் பொறுப்பு அதிகாரி பழங்குடியினர் நலத்துறை கூடுதல் செயலாளர் ஜெயா தலைமையில் கலெக்டர் மேகநாதரெட்டி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மழைநீர் சேகரிப்பு திட்டம் தொடர்பாக ஜல் சக்தி அபியான், ஜல் சக்தி கேந்திரா மற்றும் மழை நீரை சேகரிக்க நடைபெற்ற பணிகள் மற்றும் நடைபெற்று வரும் பணிகள் தொடர்பான விளக்க கட்சிகள் எடுத்துரைக்கப்பட்டது.