நெல்லை அருகே பெட்ரோல் குண்டு தயாரித்து வீசி இணையத்தில் பரப்பியவர் கைது

நெல்லை, செப்.29: சங்கரன்கோவில் அருகே பெட்ரோல் குண்டு தயாரித்து வீசி, சமூக வலைதளங்களில் வீடியோவை பதிவிட்டவர் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

சங்கரன்கோவில் அருகேயுள்ள ராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த வைரமுத்து மகன் கார்த்திக். அதே பகுதியைச் சேர்ந்த ரவி மகன் அஜித்குமார்(23), பால் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் ஓர் ஆண்டுக்கு முன்பு இவர்கள் ராமநாதபுரத்தில் உள்ள குளத்தின் கரையில் வைத்து பெட்ரோல் குண்டு தயாரித்துள்ளனர். பெட்ரோல் குண்டை அஜித்குமார் பற்ற வைக்க, அதை கார்த்திக் வீசி எறிந்ததை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பி உள்ளனர்.

ஒரு வருடம் கழித்து தற்போது இந்த வீடியோ வைரலாகி வந்த நிலையில் இதுகுறித்து ராமநாதபுரம் விஏஓ மல்லிகா கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சங்கரன்கோவில் டவுன் போலீசார் அஜித்குமாரை கைது செய்தனர். தப்பி ஓடிய கார்த்திக்கை தேடி வருகின்றனர்.

Related Stories: