வத்தலக்குண்டு, செப். 27: வத்தலக்குண்டு சென்றாய பெருமாள் கோயில் கோபுரம் கட்டும் பணியை விரைவுபடத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வத்தலக்குண்டு அருகே பழைய வத்தலக்குண்டுவில் கோட்டைப்பட்டி சென்றாய பெருமாள் கோயில் உள்ளது. 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமானவர்கள் வந்து பெருமாளை தரிசித்து செல்கின்றனர்.