ஈரோடு, செப். 23: ஈரோட்டில் கர்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு விழாவில் மேயர் நாகரத்தினம் பங்கேற்று சீர்வரிசை பொருட்களை தாம்பூல தட்டுகளில் பரிசாக வழங்கினார்.
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட நாடார்மேடு பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு மாவட்ட திட்ட அலுவலர் பூங்கோதை தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநகராட்சி மேயர் நாகரத்தினம் பங்கேற்று, 100 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு செய்து, மஞ்சள், குங்குமம், வளையல், சேலை, பேரீட்சை மற்றும் பழங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை சீர்வரிசைகளாக தாம்பூல தட்டில் வழங்கினார்.