திருச்சி, செப்.22: திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சசிகலாவின் உறவினரான கோவை ராவணன் நேற்று திடீர் இறந்தார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள ராதாநரசிம்மபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கோவை ராவணன் (65). இவரது மனைவி தாரனேஸ்வரி. இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவர்களது ஒரே மகன் அரவிந்த் (30). கொங்கு மண்டல அதிமுக முக்கிய நிர்வாகியாக இருந்து வந்த ராவணன், ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோருக்கு ஆலோசகராக இருந்து வந்தாராம். சசிகலாவின் சித்தப்பா கோட்டூர் டாக்டர் கருணாகரனின் மருமகனும் ஆவார். கோவையில் தொழில் நிறுவனம் நடத்தி வந்த ராவணன், அதிமுகவில் சசிகலா முக்கிய முடிவுகளை எடுக்கும் நிலைக்கு வந்தபோது அவருக்கு ஆலோசனைகளை சொல்லி வந்தாராம்.