திருவள்ளூர்: இறைச்சிக்காக பொதுஇடத்தில் மாடுகள் வெட்டுவதை பார்த்து மக்கள் அதிர்ச்சியடைந்தனர். திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே பெரியகுப்பம் மீன்மார்க்கெட் உள்ளது. இந்த மீன் மார்க்கெட்டில் அனைத்து வகையான மீன்கள், இறால், நண்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. 20க்கும் மேற்பட்ட மீன் கடைகளுக்கு அருகில் கோழி இறைச்சி, ஆட்டிறைச்சி கடைகள் உள்ளன. அசைவப்பிரியர்கள் தங்களுக்கு வேண்டியதை வாங்கிக் கொள்ளலாம். இதேபோல் மாட்டு இறைச்சிக்கும் தனியாக கடைகள் அமைத்து விற்பனை செய்து வருகின்றனர். கோழிகளை வெட்டி, சுத்தம் செய்து வாடிக்கையாளர்கள் கேட்கும்போது அந்த கோழிக்கறியை கேட்கும் அளவுக்கு ஏற்ப வெட்டி கொடுப்பதுண்டு. அதேபோல் ஆட்டு இறைச்சிக்கு ஆட்டு தொட்டியில் வெட்டி அதை கொண்டு வந்து பொது மக்களுக்கு விற்பனை செய்வது உண்டு.