கரூர் வீனஸ் குளோபல் கேம்பஸ் சிபிஎஸ்சி பள்ளி

கரூர், செப்.7: மாநில அளவிலான சிபிஎஸ்சி பாடப்பிரிவில் பயிலும் மாணவ மாணவியருக்கான வில்வித்தை போட்டிகள் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். கரூர் புன்னம்சத்திரம் வீனஸ் குளோபல் கேம்பஸ் சிபிஎஸ்சி பள்ளி சார்பில் மொத்தம் 18 மாணவர்கள் கலந்து கொண்டனர். 10 வயதிற்குட்பட்டோர் 10 முதல் 14, 14 முதல் 16 வயதிலான என மூன்று பிரிவுகளில் நடைபெற்றது.இப்போட்டிகளில் புள்ளிகள் அடிப்படையில் மாநில அளவில் வீனஸ் குளோபல் கேம்பஸ் பள்ளி மூன்றாம் இடம் பெற்று சாதனை படைத்தது.போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவ மாணவிகளும் பரிசுகள் பதக்கங்கள் பெற்றதுடன் பள்ளிக்கு மாநில அளவில் ஓவரால் சேம்பியன்ஷிப் மூன்றாம் இடம் பெற்றனர். பதக்கம் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் குமரவேல், செயலாளர் நதியா குமரவேல் முதல்வர் ராஜேஸ்வரி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Related Stories: