விருதுநகர் அருகே வீட்டை உடைத்து நகை, பொருட்கள் கொள்ளை

விருதுநகர்,செப்.7:விருதுநகர் அருகே பூட்டியிருந்த வீட்டை உடைத்து நகை, பொருட்களை திருடர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.விருதுநகர் அருகே சூலக்கரை மேட்டில் வசிக்கும் கோவிந்தராஜ்(66). இவர் சென்னையில் வசிக்கும் தனது மகளின் வீட்டிற்கு கடந்த ஆக.26ல் வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார். நேற்று முன்தினம் காலை திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ, உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தது. இதனை தொடர்ந்து கோவிந்தராஜ் சூலக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து வந்த போலீசார் திருட்டு நடந்த இடத்தை பார்வையிட்டு தடயங்களை சேகரித்தனர். மேலும் வீட்டில் இருந்த கலர் டிவி, கைகடிகாரம், கேமிரா, வெள்ளி பொருட்களை திருடர்கள் திருடி சென்றது தெரியவந்தது. நகைகள் மட்டுமின்றி ரூ.50ஆயிரம் மதிப்பிலான பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: