சலவை தொழிலாளர் சங்க கூட்டம்

கரூர், செப். 6: கரூரில் மாவட்ட அனைத்து சலவைத் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. கருர் வெண்ணைமலையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். செயலாளர் கருணாநிதி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் வரவேற்றார். இந்த கூட்டத்தில் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். மாவட்ட துணைத்தலைவர் பெரியசாமி நன்றி கூறினார்.கூட்டத்தில், சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் பங்குபெற்ற அனைத்து கிளைச் சங்கங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வது. புதிதாக உருவாக்கப்பட்ட இரண்டு கிளைகள் சிறப்பாக செயல்பட வேண்டும். 3 சதவீத இடஒதுக்கீடு கேட்டு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றி அனைத்து மாவட்டத்தில் உள்ள சலவை தொழிலாளர்களிடம் கையெழுத்து பெற்று முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: