பேரூராட்சி மன்ற கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்

 

கிருஷ்ணராயபுரம், செப்.21: கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி மன்ற கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கிருஷ்ணராயபுரம் பேரூராட்சியின் மாதாந்திர கூட்டம் பேரூராட்சி மன்ற தலைவர் சேதுமணி தலைமையில், பேரூராட்சி துணை தலைவர் வளர்மதி முன்னிலையில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் 2024-2025 ஆம் ஆண்டு அயோத்தியாஸ் பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டத்தின்கீழ் பிச்சம்பட்டியில் வடிகால் அமைக்க ஒப்பந்தபுள்ளி அங்கீகரித்து பணி ஆணை வழங்கவும், 2024-25 ஆறாவது நிதிக்குழு மான்யம் பள்ளி மேம்பாட்டு மான்ய நிதியின்கீழ் கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாக 6 வகுப்பறை கட்ட பணி ஆணை வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.

கிருஷ்ணராயபுரம்- பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் சாலையில் வாகன போக்குவரத்துக்கு இடையூறாகவும், விபத்து ஏற்பட கூடிய நிலையில் உள்ள இரும்பு மின்கம்பத்தை மாற்றி அமைக்க மாநில நெடுஞ்சாலை துறையை கேட்டுக்கொள்வது உட்பட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பேரூராட்சி கவுன்சிலர்கள் சசிகுமார், இளங்கோவன், லோகநாதன், மதியழகன், ராதிகா, சுசிபிரியா, ரேகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post பேரூராட்சி மன்ற கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Related Stories: