காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை: சமூக நல இயக்குநரின் கடிதத்தின்படி ஒன்றிய அரசின் மூத்த குடிமக்கள் பெற்றோர் பராமரிப்பு சட்டம் 2007, பிரிவு 32ன்படி தமிழ்நாடு மூத்த குடிமக்கள் பெற்றோர் பராமரிப்பு மற்றும் நலவிதிகள் வகுக்கப்பட்டு 31.12.2009 அன்று அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.விதிமுறைகளின்படி அலுவல் சாரா உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். அலுவல் சாரா உறுப்பினர்களின் பதவிகாலம் 3 வருடம் கடந்த நிலையில் அலுவல் சாரா உறுப்பினர்களை தேர்வு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.