திருவள்ளூர்: மாநில அளவிலான 29-வது தமிழ்நாடு கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி கோவையில் உள்ள பி.எஸ்.ஜி கல்லூரியில் நடைபெற்றது. இந்த போட்டியில் 6 வயது முதல் 18 வயது வரை வெவ்வேறு பிரிவுகளாக ஆண், பெண் என இருபாலரும் பங்கேற்று நடைபெற்ற போட்டியில் மாநிலம் முழுவதிலும் இருந்து 900 பேர் பங்கேற்றனர். அதன்படி திருவள்ளூர் மாவட்ட கராத்தே அசோசியேஷன் தொழில்நுட்ப இயக்குனர் விஜயராகவன், மாவட்ட செயலாளர் தட்சிணாமூர்த்தி, துணைத்தலைவர் ரவி, சேர்மன் லட்சுமிகாந்தன், தலைவர் ராஜா, துணை செயலாளர் தீபன் ஆகியோர் ஏற்பாட்டில் கராத்தே வீரர்கள் கோவையில் நடைபெற்ற போட்டியில் திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து 106 பேர் பங்கேற்றனர்.