ஆண்டிமடம், ஆக. 23: அரியலூர் அருகே கோவில் வழிபாட்டிற்கு சென்றிருந்த இடத்தில் குளத்தில் மூழ்கி சிறுவன் பரிதாப பலியானார். அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே அண்ணங்கார குப்பம் வன்னியர் தெருவை சேர்ந்தவர் வேல்முருகன். கொத்தனார். இவருக்கு இரண்டு மகன்கள். இந்நிலையில் நேற்று ஆண்டிமடம் அருகே உள்ள சூரக்குழி கிராமம் ரெட்ட பள்ளம் அய்யனார் கோயிலில் உறவினரின் குலதெய்வ வழிபாட்டிற்காக குடும்பத்துடன் சென்றுள்ளார். மூத்த மகனான அஜய் (8 ) குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தவர் திடீரென்று காணவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.