ஸ்ரீ பெரும்புதுார்: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீ பெரும்புதுார் அடுத்த கிளாய் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ஆனந்தன் (33). இவர், ஸ்ரீ பெரும்புதுார் அருகே போந்துாரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அடுக்குமாடி குடியிருப்பின் வெளியே ரத்த காயங்களுடன் ஆனந்தன் இறந்து கிடந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஸ்ரீ பெரும்புதூர் போலீசார் ஆனந்தன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஸ்ரீ பெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.