மழைநீர் வடிகால்களில் அடைப்பு நீக்கும் பணி

மதுரை, ஆக. 10: மதுரையில் மழைநீர் வடிகால்களில் தடையின்றி நீர் செல்லும் வகையில் அடைப்பு நீக்கும் பணி நடந்தது. மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டிருந்தது. இதனால் வாய்க்காலில் மழைநீர் செல்லாமல் சாக்கடையுடன் கலந்தது. இதை தடுக்கும் வகையில் மழைநீர் வடிகால்களில் உள்ள அடைப்பை எடுத்து தூய்மைப்படுத்த வேண்டும் என மண்டலத்தலைவர்கள் கவுன்சிலர் சார்பில் மேயர் இந்திராணி பொன்வசந்த்திடம் கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில் முதற்கட்டமாக மத்திய மண்டலத்திற்குட்பட்ட மேலமாசிவீதி, வடக்குமாசிவீதி, வடக்கு வடம்போக்கித்தெரு, வக்கீல் புதுத்தெரு ஆகிய பகுதிகளில் உதவி ஆணையாளர் மனோகரன் தலைமையில் அடைப்பை நீக்கி, வடிகால்கள் தூய்மைப்படுத்தப்பட்டன.

Related Stories: