பொன்னமராவதி,ஆக.10: பொன்னமராவதியில் உள்ள அழகிய நாச்சியம்மன் கோயில் ஆடி தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்திபெற்ற கோயில்களில் ஒன்றாக பொன்னமராவதி அழகியநாச்சியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் வருடம் தோறும் ஆடித்திருவிழா நடப்பது வழக்கம். இதேபோல இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 31ம்தேதி சுவாமிக்கு காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. தினசரி மண்டகப்படி நடந்து வந்தது. அப்போது தினசரி சுவாமி வீதிவுலா நடந்தது. இந்த கோயில் முக்கிய விழாவான தேரோட்டம் நேற்று 9ம் தேதி மாலை நடந்தது. முன்னாள் பேரூராட்சி தலைவர் ராஜாஅம்பலகாரர் தலைமையில் தேரை பொதுமக்கள் வடம்பிடித்து கோயிலை சுற்றி இழுத்து சென்று வழிபாடு செய்தனர்.