ரேஷன் அரிசி கடத்திய வாலிபருக்கு குண்டாஸ்

திருவள்ளூர்: திருத்தணி தாலுகாவுக்கு உட்பட்ட அருங்குளம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் மகன் சரவணன் (30). இவர் கடந்த 6 மாதங்களாக ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதைத் தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் தடுப்பு குற்றப் புலனாய்வு துறை வழக்குப்பதிவு செய்து, சரவணனை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

சரவணனை குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய திருவள்ளூர் மாவட்ட கலெக்டருக்கு சென்னை மண்டல காவல் கண்காணிப்பாளர் கீதா பரிந்துரை செய்தார்‌. இதன்படி, நேற்றுமுன்தினம்் சரவணனை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர்.

Related Stories: