கும்பகோணம், ஜூன்.25: கும்பகோணம் வருவாய் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் 2022-ம் ஆண்டுக்கான வருவாய் தீர்வாய கணக்கு தணிக்கை எனப்படும் ஜமாபந்தி நிகழ்ச்சி நேற்று முன்தினம் தொடங்கியது. கும்பகோணம் தாசில்தார் அலுவலகத்தில் முதல் கட்டமாக நேற்று முன்தினம் தொடங்கிய ஜமாபந்தி நிகழ்ச்சியில் கும்பகோணம் அருகே உள்ள தேவனாஞ்சேரி பகுதிக்குட்பட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை அதிகாரிகளிடம் அளித்தனர்.