மதுராந்தகம், ஜூன் 25: பூதூர் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையத்தை திடீரென மூடியதால், 20 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும்நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியம் பூதூர் ஊராட்சியில் உள்ள ஈசூர், சகாயநகர் ஆகிய கிராமங்கள் பாலாற்றங்கரையை ஒட்டியுள்ளது. இந்த கிராமத்தில் பெரும்பாலானோர் விவசாய தொழில் செய்து வருகின்றனர். இந்த கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெற்பயிர் விவசாயம் செய்து அறுவடை செய்தனர். இந்நிலையில், பூதூர் ஊராட்சியில், அரசு திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. விவசாயிகள் நெல்லை கொள்முதல் செய்து வந்த நிலையில், நெல் கொள்முதல் செய்வது திடீர் என அங்கு நிறுத்தப்பட்டது.