ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே ஸ்ரீசாய்பாபா திருக்கோயிலில் வருடாபிஷேக விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
பெரியபாளையம் அருகே ராள்ளபாடி பகுதி உள்ளது. இங்கு, ஸ்ரீசாய் பாபா திருக்கோயிலின் நான்காம் ஆண்டு கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, நேற்று காலை கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் பாபாவிற்கு பாலாபிஷேகம் செய்தனர். பின்னர், 8.30மணி அளவில் யாக வேள்வி தொடக்கம், விநாயகர் வழிபாடு, 108 கலச ஸ்தாபனம் தொடர்ந்து மகா கணபதி ஹோமம், கோபுர மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், தன்வந்திரி ஹோமம், சுதர்சன ஹோமம், 108 தாமரை மலர் மகாலட்சுமி ஹோமம், சாய்பாபா மூலமந்திர ஹோமம் உள்ளிட்ட யாகசாலை பூஜைகள் நடந்தது.