ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை அரசு ஓய்வூதியர்கள் வாழ்நாள் சான்று பதிவு செய்யலாம்: கலெக்டர் தகவல்

திருவள்ளூர்:  கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: ஆண்டுதோறும் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை கருவூலத்தில் ஆண்டு நேர்காணல் செய்யப்பட வேண்டும். ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம், சென்னை மாவட்டக் கருவூலங்கள் மற்றும் சார் கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெறும் தமிழக அரசு ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் ஆண்டுதோறும் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை கருவூலத்தில் ஆண்டு நேர்காணல் செய்யப்பட வேண்டும்.

கொரோனா பெறும் தொற்று காரணமாக கடந்த 2020 மற்றும் 2021-ம் ஆண்டிற்கான நேர்காணல் நடைபெறாத நிலையில் தற்போது ஓய்வூதியர்கள் பின்வரும் ஏதேனும் ஒரு முறையை பின்பற்றி இவ்வாண்டிற்கான (2022-23) நேர்காணல் செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஜீவன் பிரமான் இணையதள மின்னனு வாழ்நாள் சான்றிதழ், இந்திய அஞ்சல் துறை வங்கியின் சேவையை பயன்படுத்தி ஓய்வூதியர்கள் தங்களது இருப்பிடத்திலிருந்தபடியே தபால் துறை பணியாளர்கள் மூலமாக ரூ.70- கட்டணம் செலுத்தி மின்னணு வாழ்நாள் சான்று பதிவு செய்து ஆண்டு நேர்காணல் செய்யலாம்.

அரசு இ-சேவா மற்றும் பொது சேவை மையங்களின் மூலம் ஓய்வூதியர்,   குடும்ப ஓய்வூதியர்கள் உரிய கட்டணம் செலுத்தி மின்னணு வாழ்நாள் சான்றிதழ் பதிவுசெய்து ஆண்டு நேர்காணல் செய்யலாம். ஓய்வூதியர்கள் சங்கத்தின் மூலமாகவும் கைரேகை குறியீட்டு கருவியைப் பயன்படுத்தி மின்னணு வாழ்நாள் சான்றிதழ் பதிவு செய்து நேர்காணல் செய்யலாம். மின்னணு வாழ்நாள் சான்று பெற ஓய்வூதியர்கள் அளிக்க வேண்டிய முக்கிய விவரங்கள். ஆதார்எண் பிபிஏ எண், வங்கி கணக்கு எண், மற்றும் வாழ்நாள் சான்றிதழ் படிவத்தினை உரிய அலுவலரிடம் சான்றொப்பம் பெற்று தபால் மூலம் அனுப்பலாம்.

ஓய்வூதியர்கள்,  குடும்ப ஓய்வூதியர்கள் வாழ்நாள் சான்றினை லைப் சர்ட்டிபிகேட்டை www.tn.gov.in/karuvoolam என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கீழ்கண்ட ஏதேனும் ஒரு அலுவலரிடம் கையொப்பம் பெற்று தபால் மூலமாக தொடர்புடைய கருவூலத்திற்கு அனுப்பி, ஆண்டு நேர்காணல் செய்யலாம்.

ஓய்வூதிய வங்கிக் கணக்கு உள்ள வங்கியின் கிளை மேலாளர் (அல்லது)  அரசிதழ் பதிவு பெற்ற மாநில மற்றும் மத்திய அரசுஅலுவலர் (அல்லது) வட்டாட்சியர். துணை வட்டாட்சியர் அல்லது வருவாய் ஆய்வாளர் அவர்களிடம் சான்றொப்பம் பெற்று அனுப்ப வேண்டும்.

மேலும், ஓய்வூதியதாரர்கள் தங்களது விருப்பத்தின் படி நேரடி நேர்காணலுக்கு ஓய்வூதிய புத்தகத்துடன் மேற்குறிப்பிட்ட மாதங்களில் ஏதேனும் ஒரு அரசு வேலை நாட்களில் ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் மற்றும் கருவூலத்திற்கு சென்று ஆண்டு நேர்காணல் செய்யலாம். கருவூல கணக்குத்துறை ஆணையரகம், பேராசிரியர்க. அன்பழகன் மாளிகை, 3-வது தளம், நந்தனம், சென்னை-600 035, dta.tஸn@nic.in என்ற இணையம் வழியாகவோ அல்லது தொலைபேசி எண்  044 - 24321761, 044 - 24321764 044  - 24321765  ஆகியவற்றில் தெரிவிக்கலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: