ஆவடி, ஜூன் 25: பட்டாபிராம் அம்பேத்கர் நகர் சுசில் பிரான்சிஸ் தெருவை சேர்ந்தவர் அருண்குமார் (42). இவர், சேப்பாக்கம் உட் கோட்டத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி தேவி (36). தம்பதிக்கு, தமிழ்செல்வன் (10) என்ற மகன் உள்ளார். இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக பணிச்சுமை, கடன் தொல்லை மற்றும் பதவி உயர்வு கிடைக்காததால் அருண்குமார், மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக கூறபப்டுகிறது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு படுக்கையறையில் உறங்கச் சென்றார்.