அதிராம்பட்டினத்தில் விபத்து வாய்க்காலில் வேன் கவிழ்ந்தது

பட்டுக்கோட்டை, ஜூன்11: மதுரை வில்லாபுரம் பகுதியை சேர்ந்த பெண் வீட்டார் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள திருப்பாலக்குடியில் நடைபெற உள்ள ஒரு திருமணத்திற்காக நேற்று 20க்கும் மேற்பட்டோர் ஒரு வேனில் மதுரையிலிருந்து புறப்பட்டு கிழக்கு கடற்கரை சாலை வழியாக அதிராம்பட்டினம் வந்து அதிராம்பட்டினத்திலிருந்து மன்னார்குடி செல்வதற்காக அதிராம்பட்டினத்தில் உள்ள பட்டுக்கோட்டை - மதுக்கூர் பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்தபோது வேன் தனது கட்டுப்பாட்டை இழந்து பட்டுக்கோட்டை சாலையில் காளி கோயில் அருகே உள்ள பள்ளத்தில் விழுந்து வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த பெண் வீட்டைச் சேர்ந்த பூங்கொடி (45), அழகம்மாள் (60), செல்வி (20), பாண்டியம்மாள் (50), கருப்பாயி (40), நாகஜோதி (26), திருக்கம்மா (50),உதயபூமி (8), திலீப்குமார் (7) அரியநாச்சி (40) பஞ்சவர்ணம் (65) உள்பட 10 பெண்கள், 3 குழந்தைகள், வேனை ஓட்டி வந்த டிரைவர் மதுரையை சேர்ந்தபஷீத்அலி உள்பட 20 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த அனைவரும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து அதிராம்பட்டினம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: