மீண்டும் பணியில் சேர்ந்து கொள்ள வாய்ப்பு

கொள்ளிடம், ஜூன் 11: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் பணி இழந்த முன்னாள் மக்கள் நலப் பணியாளர்களை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை உறுதி திட்ட பணி ஒருங்கிணைப்பாளராக பணிபுரிய முதல்வர் மீண்டும் வாய்ப்பு அளித்துள்ளார். அதன்படி அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின்படி கொள்ளிடம் ஒன்றியத்தைச் சேர்ந்த 42 ஊராட்சிகளிலும் பணிபுரிந்து கடந்த 8.11.2011 அன்று பணியிழந்த முன்னாள் மக்கள் நலப்பணியாளர்கள் வரும் 18ம் தேதிக்குள் கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) அவர்களை நேரில் சந்தித்து விண்ணப்பித்து பணியில் சேர்ந்துகொள்ளலாம். இந்த வாய்ப்பை பணியிழந்த முன்னாள் மக்கள் நலப் பணியாளர்கள் பயன்படுத்திக் கொள்ள நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. இவ்வாறு அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்

Related Stories: