மாமனாரை மது பாட்டிலால் குத்திய மருமகன் கைது

தேவதானப்பட்டி, ஜூன் 9: தேவதானப்பட்டி அருகே குள்ளப்புரம் கீழத்தெருவை சேர்ந்தவர் சோனை. இவர் குள்ளப்புரத்தில் அவர்களது சமுதாய கூட்டத்தில் கலந்து கொண்டு வெளியில் வந்துள்ளார். அப்போது அங்கு வந்த அவரது மருமகன் முத்துமாரி (34), கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. பேசியுள்ளார். இதை சோனை தட்டி கேட்டார். உடனே முத்துமாரி அவரை தாக்கி, மது பாட்டிலால் குத்தியுள்ளார். இதுகுறித்து சோனை புகாரின் பேரில் ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துமாரியை கைது செய்தனர்.

Related Stories: