பூட்டிய வீட்டில் தீ விபத்து

பட்டிவீரன்பட்டி, ஜூன் 9: பட்டிவீரன்பட்டி தனுஷ்கோடி தெருவை சேர்ந்தவர் இங்கர்சால். இவர் நேற்று வீட்டை பூட்டி விட்டு ஊருக்கு சென்று விட்டார். வீட்டினுள் டிவியை ஆப் செய்யாமல் சென்றதால் அதிக வெப்பம் காரணமாக டிவி வெடித்தது. தொடர்ந்து தீப்பிடித்து கரும்புகை வெளியே வந்துள்ளது. அக்கம்பக்கத்தினர் தகவலின் பேரில் வத்தலக்குண்டு தீயணைப்பு துறையினர் வீட்டிற்கு வந்து கதவு, ஜன்னலலை உடைத்து சுமார் 2 மணி நேரம் போராடி தீ மேலும் பரவ விடாமல் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயினை அணைத்தனர்

Related Stories: