கீழக்கோட்டையில் சமுதாய நலக்கூட திறப்பு விழா 35 பேருக்கு முதியோர் உதவித்தொகை, இலவச பட்டா

ஓட்டப்பிடாரம்: புளியம்பட்டி அருகே கீழக்கோட்டையில் சமுதாய நலக்கூடத்தை திறந்து வைத்த சண்முகையா எம்எல்ஏ, 31 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை மற்றும் இலவச வீட்டுமனைப் பட்டா உத்தரவை வழங்கினார். ஓட்டப்பிடாரம் யூனியனுக்குட்பட்ட கீழக்கோட்டையில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாய நலக்கூட திறப்பு விழா நடந்தது. சண்முகையா எம்எல்ஏ தலைமை வகித்து சமுதாய நலக்கூடத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து  அங்கு நடந்த நிகழ்ச்சியில் கீழக்கோட்டை, கொடியன்குளம், கொல்லங்கிணறு ஆகிய கிராமங்களை சேர்ந்த 31 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை மற்றும் 4 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா உத்தரவுகளை சண்முகையா எம்எல்ஏ வழங்கினார். நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ், தாசில்தார்கள் நிஷாந்தினி, செல்வகுமார்(ச.பா.தி), துணை தாசில்தார் ஆனந்த், பிடிஓக்கள் பாண்டியராஜன், வெங்கடாசலம், பஞ். தலைவர்கள் கீழக்கோட்டை சதீஷ்குமார், அக்கநாயக்கன்பட்டி அய்யாத்துரை, கொடியன்குளம் அருண்குமார், கொல்லங்கிணறு லதா முருகன், ஒன்றிய கவுன்சிலர் ஜெயா முருகன் மற்றும் வருவாய்த்துறையினர், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: