நடனபாதேஸ்வரர் கோயில் தேர் வெள்ளோட்டம்

நெல்லிக்குப்பம், ஜூன் 2: நெல்லிக்குப்பம் அருகே திருக்கண்டேஸ்வரம் பகுதியில் 1600 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ஹஸ்த தாளாம்பிகை சமேத நடனபாதேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு இந்து சமய அறநிலைத்துறை சார்பில் ரூ.43 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிய தேர் செய்யும் பணி நடந்து முடிந்தது. இதை தொடர்ந்து 119 ஆண்டுகளுக்கு பிறகு இக்கோயிலில் தேர் வெள்ளோட்டம் நடந்தது. புதிய தேர் வெள்ளோட்டத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ. கணேசன், வேல்முருகன் எம்எல்ஏ, நெல்லிக்குப்பம் சேர்மன் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். கோயில் குருக்கள் சேனாதிபதி சிறப்பு பூஜைகள்

செய்தார். நிகழ்ச்சியில் ஆர்.ஆர். பள்ளி தாளாளர் ராதாகிருஷ்ணன், நகர திமுக செயலாளர் மணிவண்ணன், நகர்மன்ற துணை தலைவர் கிரிஜா திருமாறன், நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி, இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் அசோக்குமார், உதவி ஆணையர் சந்திரன், செயல் அலுவலர் மகாதேவி, ஆய்வாளர் தேவி, கணக்கர் சரவணன், நகராட்சி துப்புரவு அலுவலர் சக்திவேல், பொறியாளர் பாண்டு, பொது பணி மேற்பார்வையாளர் வாசு, கவுன்சிலர்கள் செல்வக்குமார், மலையான், அருள்பிரகாஷ், பன்னீர்செல்வம், ஜெயபிரபா, சத்யா மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள், பக்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: