வலங்கைமான் அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை

வலங்கைமான், மே 28: வலங்கைமான் அடுத்த சாரநத்தம் பகுதியில் தீராத வயிற்று வலியால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த சாரநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் முருகானந்தம் மனைவி மகேஸ்வரி (32). இவருக்கு கடந்த சில தினங்களாக வயிற்றுவலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று காலை வயிற்று காரணமாக மகேஸ்வரி விஷம் குடித்தார். ஆபத்தான நிலையில் இருந்த மகேஸ்வரியை குடந்தை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மகேஸ்வரி இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: