ஊட்டி, மே 27: ஊட்டி நகராட்சிக்குட்பட்ட டம்ளர் முடக்கு பகுதியில் உள்ள குளத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஊட்டி நகராட்சிக்குட்பட்ட டம்ளர் முடக்கு பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் குடியிருப்புகள் குறைந்தளவே காணப்பட்டன. அங்கு ஒரு பெரிய குளம் மட்டுமே இருந்தது. அதில், தேங்கும் ஊற்று நீர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள குடியிருப்புக்களுக்கு குடிநீர் ஆதாரமாக இருந்தது.இந்நிலையில், மக்கள் பெருக்கம் அதிகரிக்கவே இந்த குளம் ஆக்கிரமிப்பிற்குள்ளானது. தற்போது அங்கு ஏராளமான குடியிருப்புகள் வந்துவிட்டன. இந்த குளத்தை சுற்றிலும் ஏராளமான வீடுகள் வந்த நிலையில், இந்த குளம் கழிவு நீர் தேங்கி நிற்கும் பகுதியாக மாறிவிட்டது.