திருத்தணி: பெண் வயிற்றில் கத்திரிக்கோல் வைத்து தைத்த விவகாரத்தில் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றியத்துக்கு உட்பட்ட விகேஆர்.புரம் காலனியை சேர்ந்தவர் பாலாஜி. காவலாளி. இவரது மனைவி குபேந்திரி, கடந்த 2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி திருத்தணி அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. இதன்பிறகு அவரது வயிற்றில் தையல் போட்டு வீட்டுக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த நிலையில், கடந்த 12 ஆண்டுகளுக்கு பிறகு குபேந்திரிக்கு கடும் வயிற்றுவலி ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஸ்கேன் எடுத்துபார்த்தபோது வயிற்றுக்குள் கத்தரிக்கோல் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவரை சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்து அறுவை சிகிச்சை மூலம் கத்திரிக்கோல் அகற்றப்பட்டது.