சிறுமி மாயம்

ஆண்டிபட்டி, மே 25: ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி, அருகிலுள்ள அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் இறுதி தேர்வுக்கு பள்ளிக்கு சென்ற சிறுமி மாலையில் வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர் அக்கம்பக்கத்தினர், உறவினர் வீடுகளிலும் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சிறுமி பெற்றோர் புகாரில் ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: