ராமகிருஷ்ணா கலை கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கம்

கோவை, மே 24: கோவை ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச அளவிலான கருத்தரங்கம் நடந்தது. கல்லூரியின் கணித துறை சார்பில் நடந்த இந்த கருத்தரங்கில் கணிதம் மற்றும் புள்ளியியல் துறைகளில் சமீபத்திய முன்னேற்றம் என்ற கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இதில் ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி முதல்வர் சிவக்குமார், சென்னை விஐடி கல்லூரி பேராசிரியர் பார்த்திபன், மலேசியா பல்கலைக்கழக ஆக்சுவேரியல் அண்ட் குவான்டிடேட்டிவ் ஸ்டடீஸ் இயக்குநர் ராஜ சேகரன் ராமசாமி, கணித துறை பேராசிரியர் உமா, கல்வியல் புல வீன் ஹென்னா ரேவதி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் ஆய்வு சுருக்கம் அடங்கிய நூல் வௌியிடப்பட்டது. 89 பேர் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.

Related Stories: