கிணற்றில் மூழ்கி மாணவன் பலி

திருவள்ளூர்: புட்லுார் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீதர் மகன் சாருகேஷ்(17), பிளஸ் 1 படித்து வந்தான். நேற்று மப்பேடு அடுத்த கீழச்சேரி பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு பெற்றோருடன் சென்றான். பின்னர் தனது நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றான். அப்போது நீச்சல் தெரியாததால் திடீரென தண்ணீரில் மூழ்கினான்.

தகவலறிந்து அப்பகுதியில் ஆடு மேய்க்கும் தொழிலாளர்கள் உதவியுடன் பொதுமக்கள் மாணவனை மீட்டு மப்பேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது அங்கு பரிசோதனை செய்த டாக்டர் மாணவன் இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதையடுத்து மாணவனின் உடலை கீழச்சேரியில் உள்ள உறவினர் வீட்டுக்கு கொண்டு சென்றனர். தகவலறிந்த மப்பேடு போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் புகாரின்படி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: