பட்டுக்கோட்டையில் இலவச கண் சிகிச்சை முகாம்

பட்டுக்கோட்டை, மே24: பட்டுக்கோட்டையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் டிரைவர்கள், கண்டக்டர்கள், பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு இலவச கண் சிகிச்சை மற்றும் மருத்துவ முகாம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் நடந்தது. மேலாண் இயக்குனர் ராஜ்மோகன் உத்தரவின்படி, பொது மேலாளர்ஜெபராஜ்நவமணி அறிவுரையின்படி, கோட்ட மேலாளர் செந்தில் வழிகாட்டுதலின்படி முகாம் நடந்தது. முகாமில் கண் மற்றும் பொது மருத்துவர்கள் கலந்து கொண்டு பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு கிளைகளிலிருந்தும், புதுக்கோட்டை மண்டலம் பட்டுக்கோட்டை கிளையிலிருந்தும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக டிரைவர்கள், கண்டக்டர்கள், பணியாளர்கள் மற்றும் குடும்பத்தினர் சுமார் 200க்கும் மேற்பட்டோருக்கு இலவசமாக கண் சிகிச்சை மற்றும் பொது மருத்துவம் அளித்தனர். முகாமில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: