ஏரல், மே 21: சாயர்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மகளிர் சுய உதவிக்குழு கடன், விவசாய கடன், சிறுபான்மையினருக்கு கடன் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு கடன் உட்பட கடன் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. வங்கி தலைவர் அறவாழி தலைமை வகித்து ரூ.34 லட்சத்து 43 ஆயிரம் கடனுதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி பேசினார்.