கரும்பு வயலில் அழுகிய நிலையில் பெண் சடலம்

திருக்கோவிலூர், மே 21: திருக்கோவிலூர் அருகே கரும்பு வயலில் அழுகிய நிலையில் பெண் சடலம் கிடந்தது. திருக்கோவிலூர் அடுத்த செட்டிதாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன்  வெங்கடேசன் (40). அதே பகுதியில் உள்ள இவரது கரும்பு வயலில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்ததும் திருக்கோவிலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு  சென்று பிரேதத்தை கைப்பற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, அந்த பெண் செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். 

Related Stories: