ஈரோடு,மே21: தடைசெய்யப்பட்ட புகையிலை கலந்த உணவு பொருள்களை விற்பனை செய்தால் அந்த கடை திறக்க தடையாணை பிறப்பிக்கப்படும் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:புகையிலை, நிக்கோடின் கலந்த உணவுப் பொருள்களை உற்பத்தி செய்வது, அதை எடுத்துச் செல்வது, இருப்பு வைப்பது, விற்பனை செய்வதற்கு தட விதிக்கப்பட்டுள்ளது.மீறி விற்பனை செய்தால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து 2 முறை விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் இரட்டிப்பு அபராதம் விதிக்கப்படும். 3வது முறையாக கண்டறியப்பட்டால் ரூ.25 ஆயிரம் அபராதத்துடன், அந்தக்கடையின் உணவுப் பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் ரத்து செய்யப்படும்.