ஜெயங்கொண்டம், மே 20: ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதிகளில் உள்ள நீர்நிலை அருகே ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ள கட்டிடங்களை நகராட்சி நிர்வாகத்தினர் இடித்து அகற்றினர்.
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அனைத்து பகுதிகளிலும் நில ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஜெயங்கொண்டம் நகராட்சி நிர்வாகத்தினர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டவர்களுக்கு கடந்த ஒரு மாதத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள அவகாசம் கொடுத்து நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.