பஸ் கண்ணாடியை உடைத்த மாற்றுத்திறனாளி கைது

ஈரோடு, மே 19: ஈரோடு சிஎன் கல்லூரி பகுதியை சேர்ந்தவர் கவின் (26). மாற்றுத்திறனாளியான இவர், சுமை தூக்கும் பணியை செய்து வருகின்றார். நேற்று முன்தினம் வேலை முடிந்து ஈரோடு பஸ் ஸ்டாண்டில் இருந்து சிஎன் கல்லூரி நோக்கி அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்தார். பஸ், சிஎன் கல்லூரி ஸ்டாப் வந்ததும் கவின் இறங்கவில்லை. இதையடுத்து, நடத்துநர் பாபு கவினை இறங்க சொல்லி உள்ளார். இதனால் கோபமடைந்த கவின், பஸ்சை விட்டு இறங்கியதும், கீழே கிடந்த கல்லை எடுத்து பஸ்சின் பின்பக்க கண்ணாடி மீது வீசினார். இதில், கண்ணாடி உடைந்து உள்ளே அமர்ந்திருந்த மாயவன் என்ற பயணியின் நெற்றியில் பட்டு ரத்த காயம் ஏற்பட்டது. இது குறித்து பஸ் நடத்துநர் பாபு ஈரோடு வடக்கு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து மாற்றுத்திறனாளி கவினை கைது செய்தனர்.

Related Stories: