காரையூரில் பெயிண்டர் தற்கொலை

திருப்புத்தூர், மே 19: காரையூர் பகுதியில் முகாமைச் சேர்ந்த பெயிண்டர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருப்புத்தூர் அருகே காரையூர் சிங்கம்புணரி ரோட்டில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் உள்ளது. இந்த முகாமை சேர்ந்தவர் செல்வராஜ்(43). பெயிண்டர். இவருக்கு திருமணமாகி மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் முகாம் எதிரே உள்ள மரத்தின் மீது தூக்கு மாட்டி தற்கொலை ெசய்தார். இதுகுறித்து கண்டவராயன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: