மதுராந்தகம்: சித்தாமூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் ஒரு தம்பதி வசிக்கின்றனர். கூலித் தொழிலாளிகள். இவர்களுக்கு 28 வயதில் மாற்றுத்திறனாளியான மகள் இருக்கிறார். பெற்றோர் வேலைக்கு சென்ற பிறகு, இளம்பெண் வீட்டில் தனியாக இருப்பது வழக்கம். அந்த நேரத்தில் 3 வாலிபர்கள், இளம்பெண்ணிடம் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதுகுறித்து இளம்பெண்ணின் பெற்றோர், மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.