காஞ்சிபுரம்: பசுமை காஞ்சி அறக்கட்டளை சார்பில் அரசு நடுநிலைப்பள்ளிக்கு தொலைக்காட்சி பெட்டியை டிஐஜி சத்யபிரியா வழங்கினார். காஞ்சிபுரம் பசுமை காஞ்சி அறக்கட்டளை சார்பில் தியாகி நடுநிலைப்பள்ளியில் படிக்கும் ஏழை மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்கள், கல்வி உபகரணங்கள், மரக்கன்றுகள் வழங்கும் விழா தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. அறக்கட்டளை நிறுவனத் தலைவர் எஸ்.கே.பி.கோபிநாத் தலைமை வகித்தார். அறங்காவலர் ஜெயவிக்னேஷ், சங்கரா கலை அறிவியல் கல்லூரி முதல்வர் டாக்டர் வெங்கடேசன், மகரிஷி வித்யா மந்திர் பள்ளி தாளாளர் எம்.பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறங்காவலர் தி.பச்சையப்பன் பிரபு வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்யபிரியா கலந்து கொண்டு, தியாகி நடுநிலைப்பள்ளி மாணவர்களின் பயன்பாட்டுக்கு தொலைக்காட்சி பெட்டி, கல்வி உபகரணங்கள் வழங்கினார்.