காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சியில் ரூ.10.09 லட்சத்தில் 2 புதிய டிரான்ஸ்பார்மர்களை எம்எல்ஏ எழிலரசன் திறந்து வைத்தார். காஞ்சிபுரம் மாநகராட்சி பகதூர்கான்பேட்டை, ரெட்டிப்பேட்டை ஆகிய பகுதிகளில் 100 கேவி திறன் கொண்ட 2 புதிய டிரான்ஸ்பார்மர்கள் திறப்பு விழா நேற்று நடந்தது. மேயர் மகாலட்சுமி யுவராஜ் தலைமை தாங்கினார். நகர செயலாளர் சன்பிராண்ட் கே.ஆறுமுகம் முன்னிலை வகித்தார். பொதுமக்கள் பயன்பாட்டுக்கு, எம்எல்ஏ எழிலரசன், புதிய டிரான்ஸ்பார்மர்களை திறந்து வைத்தார்.