சாத்தான்குளம், மே 18: சாத்தான்குளம் அருகேயுள்ள குலசேகரன்குடியிருப்பு விலக்கில் விபத்து ஏற்படாமல் தடுக்கும் வகையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சுமார் 700 மீட்டர் தொலைவுக்கு இரும்பிலான வளைவு அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரும்பு வளைவை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இதுகுறித்து சாத்தான்குளம் நெடுஞ்சாலைத்துறை உதவிபொறியாளர் விக்ரமசிங், சாத்தான்குளம் போலீசில் புகார் செய்தார். எஸ்.ஐ.க்கள் டேவிட், எபநேசர் மற்றும் காவலர்கள் வெனிஸ்டன், சுதன், அருண்குமார் ஆகியோர் கொண்ட தனிப்படை தீவிர விசாரணை நடத்தினர். இதில் பழைய இரும்பு கடை நடத்தி வரும் ஞானியார்குடியிருப்பை சேர்ந்த ஆதிலிங்கம் மகன்கள் சுப்பிரமணி(34), முருகன்(33) ஆகியோர் இரும்பு கம்பிகளை திருடியது தெரியவந்தது.